9

எட்டு வயதில் ஹெலன் கெல்லர் எழுத்துக்களைக் கற்றுக் கொண்டு எழுதத் தொடங்கினாள். இவருக்கு லூயிஸ் பிரெய்லி முறையில் எழுத்துக்களைக் கற்பித்தார். இது கண் பார்வையற்றோருக்கான எழுத்து முறையாகும். லூயிஸ் பிரெய்லி என்கிற பிரெஞ்சுக்காரரால் உருவாக்கப்பட்ட எழுத்து முறைக்கு பிரெய்லி (Bralle) எழுத்து முறை என்று பெயர். இவர் 1821இல் பார்வையற்றோர்கள் படிக்க உதவ பிரெய்லி என்னும் புடைப்பெழுத்து முறையை உருவாக்கினார்.

ஒவ்வொரு புடைப்பெழுத்தும் ஆறு புள்ளிகள் கொண்ட செவ்வகக்கலம் ஆகும். புள்ளிகள் 6 இடைநிலைகளில் எங்கேயும் உயர்த்தப்பட்டு (26), அதாவது 64 எழுத்துச் சேர்ப்புகள் உருவாக்கப்படலாம். சில இடங்களில் புள்ளிகள் உயர்த்தப்படாமலும் இருக்கலாம். அதே போல் இலக்கணக் குறிகளுக்கு தனி எழுத்துக்கள் உண்டு.

புடைப்பெழுத்து முறையின் கருத்தமைவு நெப்போலியன் கோரிக்கைக்கு ஏற்ப சார்லஸ் பாபேஜ் உருவாக்கிய ரகசியத் தொடர்பு முறையில் தோற்றுவிக்கப்பட்டது. பாபேஜ் பார்வையற்றோர் கல்வி நிலையத்தில் லூயி பிரெய்லை சந்தித்து, லூயி பிரெய்லின் ஆலோசனைக்கு ஏற்ப குறிமுறைகளை மாற்றி அமைத்தார்.

ஹெலன் கெல்லரை 1888 மே மாதத்தில் பெர்கின்ஸ் பார்வையற்றோர் நிறுவனத்தில் கல்வி பயில சேர்த்தனர். இது அமெரிக்காவின் மிகப் பழமையான பார்வையற்றோர் பள்ளியாகும். இதனை பெர்ஜின்ஸ் பார்வையற்றோர் பள்ளி என்று அழைத்தனர். தற்போது உலகம் முழுவதும் 67 நாடுகளில் இப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு பிரெய்லி கல்வி முறையில் பார்வையற்றோருக்குக் கல்வி கற்பிக்கப்பட்டு வருகிறது. இதனை பெர்ஜின்ஸ் (Perkins) என்பவர் 1829ஆம் ஆண்டில் அமெரிக்காவில் தொடங்கினார்.

ஹெலனுக்கு எதையும் விரைவாகக் கற்றுக் கொள்ளும் ஆற்றல் இருந்தது. அவர் பிரெய்லி எழுத்துக்களை விரைவாகக் கற்றுக் கொண்டார். ஆசிரியர் ஆனிக்கு 4 மொழிகள் தெரியும். அவர் ஹெலனுக்கு, ஆங்கிலம் உள்பட லத்தீன், பிரெஞ்சு, ஜெர்மன் மற்றும் கிரேக்க மொழிகளை பிரெய்லி முறையில் கற்றுக் கொடுத்தார். ஹெலன் தனது 10 வயது நிறைவதற்குள் 4 மொழிகளைக் கற்றுக் கொண்டார். இது மிகப்பெரிய ஆச்சரியத்தை பெற்றோருக்கு ஏற்படுத்தியது.